Posts

Showing posts from October, 2020

அகோர சிவ வடிவம்: 24

Image
  அகோர சிவ வடிவம்: 24 சத்ததந்து என்பவன் சிவபெருமானிடம் பல வரங்கள் வாங்கி ஆணவமிகுதியாய் வாழ்ந்து வந்தான். தான் அடைந்த பெரும்பேற்றிற்கு ஈசனே காரணம் என்பதனையும் மறந்து வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் வேள்வி ஒன்றை நடத்த திட்டமிட்டு, ஈசனை தவிர்த்து திருமால், பிரம்மா,தேவர்கள் முதலானோரை அழைத்தான். அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறினர், ஈசனை தவிர்த்து யாகம் வளர்த்தால் அழிவுதான் உனக்கு ஏற்படும் என எச்சரித்தனர். எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை, யாகம் வளர்க்க தொடங்கினான்.இச்செய்தியை அறிந்த நாரதார், நேரே கைலாயம் சென்று ஈசனிடம் நடந்ததை கூற, வெகுண்டெழுந்த ஈசன், யாக.தை அழித்தொழிக்க கிளம்பினார். மண்டலத்தினை ரதமாகவும், உலகையே சக்கரமாகவும், அக்னிபகவானை வில்லாகவும், சந்திரன் நாணாகவும், வருணன் பாணமாகவும், போர்க்கருவிகளை ஆயுதமாய் ஏந்தியும் புறப்பட்டார்.அப்போது அங்கிருந்த வீரபத்திரனை நோக்கி "சத்ததந்துவின் யாகத்தை அழித்துவிடு" என ஆணையிட்டார். குமரக்கடவுளை சாரதியாய் கொண்டு தேரில் கிளம்பினார் வீரபத்திரர். வருண அஸ்திரத்தை எய்தி யாகத்தை அழித்தார் வீரபத்திரர். அத்துடன் நிற்காமல் தன் அகோர ஆத்திரம் கொண்டு அவ

சுரம் நீக்கும் இறைவன்:23

Image
 சுரம் நீக்கும் இறைவன்:23 மாபலிசக்ரவர்த்தியின் மகன் வாணாசுரன் சிறந்த சிவபக்தன், ஈசனை நோக்கி தவமியற்றி உலகம் முழுவதும் ஆளும் வல்லமையும், அக்கினையையே மதிலாய் கொண்ட அரண்மனையும் வரமாய் பெற்றான். உலகை ஆட்சி செய்தவன் மீண்டும் இறைவனிடம் தவமியற்றி, தம்முடைய மாளிகையில் விநாயகர், முருகன், உமை, ஈசன் தம் மாளிகையில் வீற்றிருக்குமாறு வேண்ட இறைவனும் அவ்வாறே தம் குடும்பத்துடன் வாணாசுரனது மாளிகையில் வீற்றிருந்தார். இறைவனே தம் வீட்டில் எழுந்தருளியிருந்ததால், மமதை அதிகமாகி உலகோரை அச்சுறுத்தினான்.தன்னை எதிர்க்க எவறும் இல்லாததால் செருக்கு மிகுதியாகி இறைவன் என்பதையே மறந்து ஈசனை போர்புரிய அழைத்தான். ஈசன் புன்னகைத்து, "உன்னோடு துவாரகை நாயகன் கண்ணன் போர்புரிவான்" என்றார். கண்ணன் என்னுடன் பலமுறை போரில் தோற்றோடியவர், அவரா எனக்கு ஈடு! என பதிலுறைத்தான் வாணாசுரன், அச்சமயம் வாணாசுரனின் மகள் உசை, கண்ணபிரானின் மகன் அநிருத்தன் தன்னோடு கனவில் உடலோடு கலந்ததாய், கனவு கண்டாள். அதன் பலனாய் அவள் கருவுற்றாள். இதனையறிந்த வாணாசுரன், அநிருத்தனை சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வெகுண்டெழுந்த கண்ணன் படையை திரட்டி வந்தான்.

இடபாந்திகர்-22

Image
  இடபாந்திகர்-22 நரன்களின் ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு நரன்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும். 12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம், 2000 சதுர்யுகம் கொண்டது நான்முகனான பிரம்மரின் ஒருநாள். இத்தகைய நாட்களை கொண்ட நூறு ஆண்டு காலம் என்பது பிரம்மாவின் ஆயுட்காலம். பிரம்மாவின் ஆயுட்காலம் என்பது, திருமாலின் ஒரு நாளாகும். திருமாலின் நூறு ஆண்டுகள் அவரது ஆயுட்காலம். திருமாலின் ஆயுள் முடிந்ததும். உலகின் அனைத்து ஆன்மாக்களும் மறையும். அப்பேரூழிக்காலத்தில் எஞ்சியிருந்த சிவன்,உமையாள் காணும் வண்ணம் ஊழித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். இவ்வூழிக்காலத்தில் தானும் அழியபோகிறோம் என வருந்திய தருமதேவதை இடபமாக மாறி ஈசனிடம் தஞ்சம் புகுந்தது.  தம்மை இப்பேரூழிகாலத்தில் அழியாது காக்கவேண்டும்! தான் இடைவிடாமல் உங்களுக்கு பணிசெய்ய காத்திருக்கிறேன், என அஞ்சியபடி வேண்டி நின்றது! ஈசனும் அருட்கொண்டு, "அஞ்சாதே!" என அபயமளித்து தம் கரத்தினை அதன் தலைமேல் வைத்து காத்தருளினார். அக்கோலமே "இடபாந்திகர்" கோலம் எனப்படும்!  இறைவன் காளைமீது சாய

ஊர்த்துவ தாண்டவர்-21

Image
 ஊர்த்துவ தாண்டவர்-21 சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள், உலக உயிர்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் தீமையை பொறுக்க இயலா தேவர்கள்,  பார்வதிஅம்மையை நோக்கி கடுந்தவமியற்றி தம்மை காத்தருளுமாறு வேண்டினர். ஈசரின் அனுமதியை பெற்று, "அசுரர்களை அழிப்பேன்" என வெஞ்சினம் கொண்டு கிளம்பினார். தன்னை கொல்ல வரும் அம்மையின் பேரழகில் மதிமயங்கிய நிசும்பன் தன்னை மணந்து கொள்ளும்படி அம்மையிடம் தூதுஅனுப்பினான், நிசும்பனிடம் விளையாட எண்ணிய அம்மை, "என்னை எவர் போரில் வெல்கிறாரோ! அவரே எனை வெல்ல முடியும்" என மறு செய்தி அனுப்பினார். கடும்போர் மூண்டது.  அனைத்து அசுரர்களையும் வெறிகொண்டு அழித்தாள் அம்மை. இறுதியாய் "ரத்தபீசன்" என ஒருவன் மட்டும் எஞ்சினான். அவன் உடலில் உதிரும் ஒவ்வொருதுளி உதிரத்திலும், ஒரு அசுரன் தோன்றிகொண்டேயிருந்தான். இவனை அழித்தாளொழிய போர் முற்றுபெறாது என எத்தனித்து தன் பிரதியான ஆக்ரோஷ காளியை வரவழைத்தார். ரத்தபீசனை பார்வதியம்மை கொள்ளும்போது, அவன் உடலில் வழியும் இரத்தத்தை குடித்து முடிக்குமாறு காளிக்கு ஆணையிட, காளியும் அம்மையின் கட்டளையை நிறைவேற்ற மடி

திரிபாதமூர்த்தி-20

Image
  திரிபாதமூர்த்தி-20 ஊழிக்காலம் தோன்றுகையில், நான்முகன், திருமால், உருத்திரன் மூவரும் பரம்பொருளான சிவனிடத்தில் ஒடுங்குவர். மாதம் பன்னிரண்டு கொண்டது தேவர்களுக்கு ஒருநாள், இந்த நாட்கள் பன்னீரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தால் ,அதுவே ஒரு ஊழிக்காலம்.இந்த ஊழிக்காலம் நான்கு கடந்தாலே அது பிரம்மனுக்கு ஒரு பகல். இதற்குள் தேவர்கள் ,மாவலி ,அற்புதன் போன்றோர் துஞ்சுவர்.இவர்களுக்கு பின் பிரம்மன் துஞ்சுவார்.இத்தகைய பிரமர் ஒருகோடி பேர் துஞ்சினால் அது திருமாலிற்கு ஒரு பகலாம். அதன்பின் தன் காலஅளவு கடந்தபின் திருமாலும்,ருத்திரனும் துஞ்சியபின் இவர்கள் அனைவரும் பரம்பொருளான சிவனிடம் கலந்துவிடுவர்.  இவ்வாறு பிரமர், திருமால், ருத்திரன் என மூவரும் பரம்பொருளான ஈசனிடம் ஒடுங்கிய கோலமே "திரிபாத மூர்த்தி" எனப்படும். இன்று இக்கோலம் தவறுதலாய் "ஏகபாதமூர்த்தி" என அழைக்கப்பட்டு வணங்கபடுகிறது பல தலங்களில். உண்மையில் ஏகபாதமூர்த்தி என்பது சிவதிருமேனிகளில் வேறு ஒரு கோலமாகும்.  ஏகபாதமூர்த்தி கோலத்தில் திருமாலும், பிரம்மனும் காலின்றி நேரே இறைவனிடத்தில் இணைந்திருக்கும் கோலமாகும்.

மகாசதாசிவ வடிவம்-19

Image
  மகாசதாசிவ வடிவம்-19 ஈசனின் ஐந்துமுக வடிவான சதாசிவ மூர்த்தயின், ஒவ்வொரு முகத்திலும், ஐந்து முகமாய் ஆகமொத்தம் 25 முகவடிவங்கள் ஏற்படுத்தப்பட்ட வடிவம் "மகேஸ்வர வடிவம்" எனப்படுகிறது. 25 முகங்கள், 50 கைகள் என பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட இவ்வடிவம் "மகாசதாசிவ மூர்த்தி" ஆகும். பெரும்பாலும் கோபுரங்களின் சுதைசிற்பமாய் இவ்வுருவம் அமைந்துள்ளது. கைலாயத்தில் இருந்து, அனைத்து உயிர்களுக்கும் மகாசதாசிவர் அருள்புரிவதாய் ஸ்ரீஸ்கந்த புராணமும், ஸ்ரீதத்துவநிதியும்  கூறுகிறது!  ஆனால் "சிவப்பராக்கிரமம்" நூலோ கணக்கிமுடியா அளவு முகத்தினையும், கரத்தினையும் கொண்டவரென கூறுகிறது.                                                                                                                                                                                                          "எண்ணில்பல் கோடி சேவடி முடிகள் எண்ணில்பல் கோடிதிண் தோள்கள் எண்ணில்பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும் எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய் நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும் எண்ணில்பல் கோடி குணத்தர

மாதொருபாகன்:18

Image
  மாதொருபாகன்:18 ஆணும், பெண்ணும் ஒத்த உரிமையும், இருவரின் ஒன்றுகூடலாலே உயிர்கள் தோன்றுகின்றன, எனும் தத்துவத்தினை உணர்த்தும் திருவுருவே அர்த்தநாரி எனும் மாதொருபாகன் திருவடிவம். பிருங்கி முனிவர், ஈசனை மட்டுமே வணங்கும் இயல்பினர். ஆதலால் உமைக்கு இயல்பாகவே சினம் ஏற்ப்பட்டது. பிருங்கியின் ஆற்றலை இதனால் குன்றசெய்தார் உமையம்மை. நேராக நிற்க முடியாமல் கூன்விழுந்து, உடல் உருக்குலைந்து எலும்புக்கூடானார். தன் பக்தனின் சோதனையை கண்டு, ஒருகால்  அளித்து அவரை நிற்கும்படி செய்தார். இவ்வாறு உமை ஏற்படுத்திய இடர்களை, ஈசன் களைந்தார். வேதனையுற்ற உமை ஈசனைநோக்கி கடுந்தவம் இயற்ற, தேவியின் தவத்திற்கு மனம்இறங்கிய ஈசர், தம் உடலில் பாதியை அளித்து, மங்கையொருபாகனானார். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" (ஐங்குறுநூறு) "பெண்ணுறு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" (புறநானூறு) "கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறை ஏத்த நிற்கும்" (சிலப்பதிகாரம்) மேற்கண்ட சங்க இலக்கிய பாடல்கள் இவ்வடிவத்தின் தொன்மையை பறைசாற்றுகிறது. "வெந்த வெண்ணீறு அணிந்து விரிந

மாலொருபாகர்-17

Image
 மாலொருபாகர்-17 ஈசனை நோக்கி ஒருமுறை தவமியற்றினார் திருமால். அதனால் மகிழ்ந்த ஈசர், அனைவரையும் மயக்குகின்ற சக்தியை உமக்கு தந்தோம் என அருளினார்,"மேலும் எமக்கு இடப்பாகம் இருக்கும் வரத்தையும் தந்தோம்" என அருளினார். இவ்வடிவில் இருவரும் ஒரு கூறாய் உள்ளனர். சைவ-வைணவ இணைப்பு முயற்சியில் இவ்வடிவம் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும், சங்க இலக்கியத்திலேயே இவ்வடிவம் குறித்த குறிப்புள்ளது, அகநானூற்று 360 ம் பாடலில், "வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து  உரு உடன் இயைந்த தோற்றம் போல,  அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,  வந்த மாலை பெயரின், மற்று இவள்  பெரும் புலம்பினளே தெய்ய" ஒளியாகிய சிவனும், இருளாகிய திருமாலும் இணைந்து காட்சி தரும் தெய்வம் உருவம் ஒன்றாக இணைந்திருக்கும் தோற்றம் போல பகலும் இரவும் ஒன்றிணைந்து காணப்படும் அந்தி வானம் இது என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது. சங்ககாலம் முதலே இவ்வடிவத்தினை மக்கள் அறிந்திருந்தற்கு இது சான்றாகும்.  "தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு, இரண்டுருவு மொன்றாய் இச

அடிமுடிகாணா அண்ணல்-16

Image
  அடிமுடிகாணா அண்ணல்-16 நான்முகனுக்கும் விஷ்ணுவிற்கும் ஒருமுறை யார் பெரியவர் என விவாதம் எழுந்தது. அச்சண்டையை தீர்த்துவைக்கவும், யார் உண்மையில் பெரியவர் என சர்ச்சையை தீர்த்துவைக்கவும், பேரொளியாக சோதித்தம்பம் ஒன்று தோன்றியது. அச்சோதியின் அடிமுடியை காண்பவரே தம்முள் பெரியவர் என முடிவெடுத்து, அன்னப்பறவையின் தோற்றத்தில் மேலே செல்வும், வராக அவதாரமெடுத்து கீழேசெல்லவும் தீர்மானித்து சென்றனர். வராக அவதாரமெடுத்து மண்ணைத்தோன்டியவாரு கீழே சென்று கொண்டிருந்தார் திருமால் நீண்டகாலம் கழிந்தும் அவரால் அச்சோதியின்அடியை காண இயலவில்லை. இதேநிலைமை தான் மேலே சென்ற நான்முகனுக்கும், அச்சமயம் மேலிருந்து கீழாக ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்தது, அதனிடம் நான்முகன் எங்கிருந்து வருகிறாய் என வினவ, நான் சோதித்தம்பத்தின் முடியிலிருந்து கீழே நீண்டகாலமாய் வந்து கொண்டிருக்கிறேன் என பதிலுறைத்தது! நான்முகன் அம்மலரிடம், நானும் நீண்டகாலமாய் கீழிறிந்து பயணப்பட்டு மேலே சென்றுகொண்டிருக்கிறேன், இன்னும் அச்சோதியின் தலைப்குதியை காணமுடியவில்லை! நான்முடியை கண்டதாய் கூறப்போகிறேன், நீஎனக்கு சாட்சி சொல்லவரவேண்டும், என நான்முகன் கேட்டுக்கொள்

லிங்கத்திருமேனி-15

Image
  லிங்கத்திருமேனி-15 சிவவழிபாட்டின் தொன்மையான வடிவம் லிங்கத்திருமேனியாகும். உருவம், கை,கால் முதலிய உறுப்புகள் எதுவுமின்றி, உருவமற்ற மேனியாதலால், "அருவத்திருமேனி" எனவும் "சதாசிவ திருமேனி" எனவும் அழைக்கப்படுகிறது. தேவர்கள் செல்வத்தை அடையும் பொருட்டு மகாலிங்க மூர்த்தியை வழிபட்டனர் என ரிக்வேதம்(5:313) கூறுகிறது.  கந்து வழிபாடு: சங்க இலக்கியம் காட்டும் கந்து வழிபாட்டின் நீட்சியே லிங்கவழிபாடு என்பது கோ.சுப்ரமணியபிள்ளை முதலானோர் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் கந்துவழிபாடு பிரதானமாய் இருந்துள்ளது. "கழிகெழு கடவுள் கந்தம் கைவிட"(புறம்) "புற்றுடைச் சுவர புதல்இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாட் கந்தம்"(அகம்) போன்ற சங்க இலக்கியபாடல்கள் வாயிலாக கந்துவழிபாடு அன்று பிரதானமாய் இருந்ததை அறியலாம். கந்து என்பது மரமாகும். அன்று மரத்தில் தெய்வம் உறைவதாய் தமிழர்கள் நம்பினர். மன்னர்கள் தாம்வெற்றி பெற்ற நாட்டிலிருந்து கொணர்ந்து வந்த பகைவர்மகளிரை கந்துவழிபாட்டிற்கு பணிவிடை செய்ய நியமித்தனர். அவர்கள் கந்துவினை நீரால் கழுவி, நறுமணபொடிகளை தூவி, மாலையிட்டு

நல்லிருக்கை நாயகர்-14

Image
  நல்லிருக்கை நாயகர்-14 பார்வதியாய் புவியில் தோன்றி கடுந்தவம் மேற்கொண்டு ஈசனை மணந்தார் உமையம்மை, ஒருநாள் ஈசரிடம் தமக்கு சிவகாமங்களை உபதேசிக்க வேண்டினார். அதனையேற்று ஈசனும் தீட்சை வழங்கி, பிரணவமந்திரத்தை உபதேசித்தார், மலர்களை அணிந்து சிவனாரின் இடப்புற மடியினில் அமர்ந்து, பிரணவமந்திரத்தின் தோற்றம், பொருள், வழிபடும்முறைகளை கேட்க, ஈசனும் உமையம்மையின் வேண்டுகோளினை ஏற்று சுகாசனத்தில் அமர்ந்து, சிவஆகமங்களை உபதேசித்த கோலமே, சுகாசனமூர்த்தி கோலம் ஆகும். "முக்கணும் நிலவெழ முகிழ்த்த மூரலும் சக்கர வதனமும் தயங்கு வேணியும் செக்கர்மெய்யும் வதனும் ஆன.." என வில்லிபாரதத்தில் வில்லியார் குறிப்பிடுகிறார். சிற்பங்களில் சுகாசனர்: ஒருமுகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டு, இரு கரங்களில் மானும், மழுவும் ஏந்தி ஒருகரம் காக்கும் கரமாகவும், மறுகரம் வழங்கும் கரமாகவும் இருக்கும். ஈசனது சுகாசன கோலம், தனியாகவும்,  உமைசகிதமாகவும், கந்தனுடன் சேர்ந்து சோமாஸ்கந்தர் வடிவிலும் காட்டப்பட்டிருக்கும். புலித்தோலையும்,பட்டாடையும் அணிந்திருப்பார். உடலை எப்பக்கமும் சாய்க்காமல், நேராக நிமிர்த்திய நிலையில் ஒருகாலை தொங